For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு ஊழியர்கள் ஐ.டி. கார்ட் அணிய உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு ஊழியர்கள் அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு தான் பணியில் ஈடுபட வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் போன்ற தேவையற்றவர்கள் நடமாடுவதைத் தடுக்கும் வகையிலும்,பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்களை நாடி வரும் பொதுமக்கள், தாங்கள் சந்திக்கும் அலுவலர்கள்,ஊழியர்களின் பெயர், பதவிகளைத் தெரிந்து கொள்ள வசதியாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மற்றவர்கள் பார்வைக்கு தெரியும் வகையில் அடையாள அட்டைகளை ஊழியர்கள் அணிய வேண்டும்என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல் கட்டமாக தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் அரசுஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படவுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X