பிரதமரிடம் வழங்கப்பட்ட சன் டிவி சுனாமி நிதி
டெல்லி
சன் டிவி சார்பில் திரட்டப்பட்ட சுனாமி நிவாரண நிதி ரூ. 5.5 கோடி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று வழங்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்த சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன் இதற்கான காசோலையைவழங்கினார்.
சன் டிவிக்கு நேயர்கள் அளித்த ரூ. 4.5 கோடி மற்றும் தனது தனிப்பட்ட நிதியுதவியாக ரூ. 1 கோடி என மொத்தம் ரூ. 5.5 கோடி நிதியைகலாநிதி வழங்கினார்.
இந் நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சரும் கலாநிதியின் தம்பியுமான தயாநிதி மாறன், கலாநதி மாறனின் மனைவி காவேரி ஆகியோர்உடனிருந்தனர்.
இந்த நிதியிலிருந்து ரூ. 4 கோடியை தமிழக சுனாமி நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்குமாறு பிரதமரை கலாநிதி கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மத்திய குழு ஆய்வு:
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளில் சுனாமியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட மாநிலங்களவைத் துணைத் தலைவர்ரகுமான்கான் தலைமையில் நான்கு எம்.பிக்கள் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது .
இக் குழுவினர் இன்று கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் நாகை மற்றும் காரைக்கால்
பகுதிகளுக்குச் சென்றனர்.
இக்குழுவினர் நாளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி தாக்கிய பகுதிகளைப் பார்வையிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் உலக வங்கியின் தொழில்நுட்ப குழுவினரும் (12 பேர்) கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைபார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications