சுனாமி: நல்லெண்ண தூதராக விவேக் ஓபராய்!
டெல்லி:
ஜோர்டானில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் இளைஞர்கள் அமைதி மாநாட்டில் இந்தியாவின் நல்லெண்ணத் தூதராகக் கலந்து கொள்ளநடிகர் விவேக் ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவேக் ஓபராய் சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு இந்த சிறப்பு அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக மதத் தலைவர்கள் அமைப்பின் தலைவரும், முன்னாள் வி.எச்.பி. தலைவருமான பி.கே. மோடி நிருபர்களிடம்கூறியதாவது:
அமைதியான உலகத்தை ஏற்படுத்துவதற்கான தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களுக்கு ஒரு சர்வதேச அடித்தளத்தை வழங்குவதே உலகஇளைஞர்கள் மாநாட்டின் நோக்கமாகும். இதில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு விவேக் ஓபராய் தலைமைவகிப்பார்.
மத விவகாரங்களில் இந்தியா உலக நாடுகளுக்குத் தலைமைப் பொறுப்பை வகிக்க விரும்பினால், அது தேர்ந்தெடுக்க வேண்டிய பாதைபுத்தரின் பாதையாகும். அதனால்தான் சங் பரிவார் அமைப்புகளில் இருந்து நான் விலகினேன்.
நான் இப்போது வி.எச்.பி. சர்வதேச அமைப்பின் தலைவராக இருக்கிறேன். இந்துக்கள் உட்பட அனைத்து மதங்களுக்கும் ஆதரவானவனாகஇருக்க விரும்புகிறேன். முஸ்லீம்களுக்கு எதிராகவோ, கிறித்தவர்களுக்கு எதிராகவோ செயல்பட விரும்பவில்லை.
சாதி ஒழிப்பு, மத நிறுவனங்களில் அரசின் தலையீட்டை ஒழிப்பது மற்றும் மத நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது ஆகியவிஷயங்களுக்காக வி.எச்.பியுடன் இணைந்து பணியாற்றுவேன்.
முன்னாள் வி.எச்.பி. உறுப்பினர்களின் அறங்காவலர் குழுவிலும் தொடர்ந்து பதவி வகிப்பேன் என்றார்.
தொழிலதிபரான மோடி அண்மையில் மகா போதி அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications