சூடு பிடிக்கிறது மாதவன் தாக்கப்பட்ட வழக்கு: 2வது நாளாக பிரேம்குமார் விசாரணை
நெல்லை:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று இரண்டாவது நாளாக நெல்லையில் எஸ்பி பிரேம்குமார் விசாரணைநடத்தினார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி கோவிலில் சிவன் சன்னதியை ஜெயேந்திரர் அகற்ற உத்தரவிட்டதை எதிர்த்துப்போராடியவர் அர்ச்சகர் மாதவன்.
சென்னையில் வைத்து அவர் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த வழக்கில் ஜெயேந்திரரின் பெயரை சமீபத்தில் தான் சேர்த்தது தமிழகபோலீஸ்.
இந்த வழக்கிலும் தன்னை போலீசார் கைது செய்யலாம் என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர்மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தியுள்ளார் எஸ்பி பிரேம்குமார். நேற்று கூடுதல் எஸ்பி சக்திவேல் உள்ளிட்டபடையினருடன் நெல்லை வந்த பிரேம்குமார் திருக்குறுங்குடி கோவிலில் சென்று விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்தக் குழு இன்றும் திருக்குறுங்குடி மற்றும் வள்ளியூர் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறது. இந்தப் படையில் பெண் இன்ஸ்பெக்டரும்இடம் பெற்றுள்ளார்.
இந்தக் கோவிலின் சிவன் சன்னதி அகற்றப்பட்டது ஏன், அதற்கு உத்தரவிட்டது யார், இதை எதிர்த்தவர்கள் யார், யார், இந்தக் கோவிலின்மேலாளர் முருகேசனின் சமீபத்திய திடீர் மர்ம மரணம் (இவரது உடல் தண்டவாளத்தில் கிடந்தது) ஆகியவை குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தக் கோவிலில் ஜெயேந்திரர் தலையிட்டது குறித்து முருகேசன் தான் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தந்து வந்ததாக தனிப்படைபோலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இந்தக் கொலை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைசென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
அதுவரை ஜெயேந்திரரைக் கைது செய்யவும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications