For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபச்சார வழக்கு: ஜெயலட்சுமியை ஜாமீனில் எடுத்த அதிமுகவினரிடம் சிபிஐ விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலட்சுமியை ஜாமீனில் எடுத்த அதிமுக புள்ளிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.

நெல்லையில் ஜெயலட்சுமி இருந்தபோது அவர் மீது போலீஸார் விபச்சார வழக்குப் பதிவு செய்து, பாளையங்கோட்டைகொக்கிரகுளம் கிளைச் சிறையில் அடைத்தனர். ஜெயலட்சுமியுடன் குடும்பம் நடத்திய எஸ்பி ராஜசேகருக்கும் அவருக்கும்இடையே பிரச்சனை ஏற்பட்டதால், எஸ்பியின் தூண்டுதலால் இந்த விபச்சார கேஸ் போடப்பட்டதாக ஜெயலட்சுமி தரப்புசொல்கிறது.

இந்த விபச்சார வழக்கில் ஜெயலட்சுமியை ராஜாமணி, அனந்தப்பன், சந்திரன் ஆகியோர் ஜாமீனில் எடுத்தனர்.

ஜெயலட்சுமி விவகாரம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இந்த ஜாமீன் ஆசாமிகளையும் விசாரித்தது

விசாரணைக்குப் பின் அவர்கள் நிருபர்களிடம் பேசியபோது, நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் சுதா பரமசிவம்தான்ரூ.3,000 கொடுத்து ஜெயலட்சுமியை ஜாமீன் எடுக்கச் சொன்னார் என்றும், ஜாமீனில் வெளிவந்த ஜெயலட்சுமி அமைச்சர்தளவாய்சுந்தரத்துடன் குற்றாலம் சென்றதாகவும் கூறினர்.

இதையடுத்து சுதா பரமசிவம், நெல்லை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் ராஜா செல்வம், சங்கரலிங்கம் உட்பட 8 பேருக்குசிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி சுதா பரமசிவம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோர் இன்று சிபிஐ அலுவலகத்தில்ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X