அருணா கொலை: ராஜாவுக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஏ.ராஜாவுக்கு நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
எஸ்.ஏ. ராஜா சார்பில் திருநெல்வேலி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்தமனுவை நீதிபதி கருப்பையா விசாரித்தார்.
அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமலையப்பன், விசாரணை இன்னும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது.ராஜாவிடம் இன்னும் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. அவர் மிகவும் செல்வாக்கான மனிதர். இந் நிலையில் அவரை விடுதலைசெய்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றார்.
இதைத் தொடர்ந்து ராஜாவின் ஜாமீன் மனுவை நீதிபதி கருப்பையா தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications