காஷ்மீர்: பஸ் பள்ளத்தில் விழுந்து 28 பேர் பலி
உத்தம்பூர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 28 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர்காயமடைந்தார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 28 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர்காயமடைந்தார்கள்.
ராம்நகரில் இருந்து உத்தம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, இன்று காலை 11.45 மணியளவில் எதிர்பாராதவிதமாகசாலையிலிருந்து விலகி, 300 அடி பள்ளத்தில் விழுந்து விட்டது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் இறந்தார்கள்.
இவர்கள் தவிர மேலும் 29 பேர் காயமடைந்தனர். இதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்தவர்கள்ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் உத்தம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications