For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பூமி வெப்பமடைந்து வருவதால் அண்டார்டிகாவில் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியக் கடலோரப்பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் இங்கிலாந்து அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டேவிட் கிங் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

காற்று மண்டலத்தில் கார்பன் மோனாக்சைடின் அளவு அதிகமாகியி வருவதால், பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. கடந்த 14ஆண்டுகளில் 10 ஆண்டுகள் அதிக வெப்பமுள்ள ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. 2003ல் சராசரி வெப்ப அளவை விட 10 டிகிரிசெல்சியஸ் அதிக வெப்பம் இருந்தது.

வெப்பம் அதிகரித்து வருவதால் பூமியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுகின்றன. இதன் மூலம் கடல் மட்டத்தின் அளவு அதிகரித்து வருகிறது.இதனால் இந்தியாவில் கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும். பருவநிலையிலும் மாற்றம் ஏற்படும்.

பருவ மழை பெய்யும் காலங்களில் மாற்றம் நிகழக்கூடும். இந்தியாவின் பொருாளதாரம் பெரும்பாலும் பருவ மழையை நம்பியிருப்பதால்நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பருவநிலை மாற்றங்கள் குறித்து இந்திய, இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X