சட்டசபை கூட்டம் இன்று முடிகிறது
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர், முதல்வர் ஜெயலலிதாவின் உரைக்குப் பின்னர் இன்றுடன் முடிவடைகிறது.
ஜனவரி 31ம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுனர் பர்னாலாவின் உரையுடன் சபை நடவடிக்கைகள் தொடங்கின.
(ஆளுநர் உரையை தமிழில் வாசிக்க மாட்டோம் என்று அறிவித்த சபாநாயகர் காளிமுத்து ஆளுநரின் நெருக்கடி காரணமாக அதை தமிழில் வாசித்தது குறிப்பிடத்தக்கது)
இதைத் தொடர்ந்து ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வந்தது.
இன்று எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் இந்த விவாதத்தில் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்குகிறார். அதன் பின்னர் சபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும்.
இதையடுத்து இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் எனத் தெரிகிறது.