கோவா அரசு கலைப்பு: தமிழகத்தில் பாஜக போராட்டம்
சென்னை:
கோவா அரசுக் கலைப்பை எதிர்த்து சென்னையில் பா.ஜகவினர் போராட்டம் நடத்தினர்.
கேவாவில் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன்,
கோவாவில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க. அரசுக்கு போதிய அவகாசத்தை ஆளுநர் ஜமீர் தரவில்லை. அதே நேரத்தில்மெஜாரிட்டியே இல்லாத காங்கிரஸ் அரசுக்கு நிறைய அவகாசம் கொடுத்துள்ளார்.
நேபாளத்தில் அரசு கலைக்கப்பட்டதற்கு குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோவாவில் நடந்த ஜனநாயகப்படுகொலையை கண்டிக்காதது ஏன்?.
அதே போல மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திமுக, மாநில அரசு கலைக்கப்பட்டதை கண்டிக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்என்றார்.
பா.ஜ.க. தேசியச் செயலாளர் இல.கணேசன் பேசுகையில்,
ஜனநாயகத்தைப் பற்றி இனிமேல் காங்கிரஸ் பேசுவதற்கு அருகதையே கிடையாது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டப் பேரவையோடு நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் வரப் போவது மட்டும் நிச்சயம் என்றார்.












Click it and Unblock the Notifications