இந்தோனேஷியா: இந்தியருக்கு மரண தண்டனை
ஜகார்தா:
இந்தோனேஷியாவுக்கு போதைப் பொருளைக் கடத்திச் சென்ற இந்தியருக்கும் பிரேசிலைச் சேர்ந்த ஒருவருக்கும் தூக்கு தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
குர்தீப் சிங் என்ற திஷால் (38) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 300 கிராம் ஹெராயின் போதைர் பொருளைஇந்தோனேஷியாவுக்குள் கடத்திக் கொண்டு வந்தபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதே போல பிரேசிலைச் சேர்ந்த ரோட்ரிகோ குலார்டே (32) என்பவரும் 6 கிலோ கொகைன் போதைப் பொருளுடன் கடந்தஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
இந்த இருவர் மீதும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் இருவருக்கும் மரண தண்டனை விதித்து பாண்டேன்மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத் தண்டனையை எதிர்த்து இருவரும் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவுக்குள் ஹெராயினைக் கடத்திச் செல்ல தனக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் 2,000 அமெரிக்க டாலர்கொடுத்ததாக குர்தீப் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் ஒரு இந்தியருக்கு போதைப் பொருள் கடத்தலுக்காக இந்தோனேஷியாவில் மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications