கெளசல்யன் உள்பட 5 புலிகள் சுட்டு கொலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

kousalyanவிடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் முக்கியத் தலைவர்களின் ஒருவரான கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் மேலும் 4 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

கருணா தலைமையிலான கும்பல் தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்டாலும், இந்தக் படுகொலைகளில்ராணுவத்திற்கு தொடர்புள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிழக்கு இலங்கையில் புலிகளின் அரசியல் பிரிவின் முக்கியத் தலைவராக விளங்கியவர் கெளசல்யன். மட்டக்களப்பு-அம்பாறைமாவட்ட பொறுப்பாளராக இருந்தவர்.

நேற்று இரவு 7.45 மணியளவில் சந்திர நேரு என்ற முன்னாள் தமிழ் தேசியக் கூட்டணி எம்.பியுடன் மட்டக்களப்பில் காரில் சென்றகெளசல்யனையும் உடன் வந்த 4 புலிகளையும் கருணா தலைமையிலான படையினர் சுற்றி வளைத்துக் கொன்றதாக ராணுவம்கூறியுள்ளது.

ஆனால், ராணுவத்திற்காக ரகசியமாக பணியாற்றும் ஒரு கும்பல் தான் இந்தப் படுகொலைகளைச் செய்ததாக புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இத் தாக்குதலில் சந்திர நேருவும் அவரது மெய்க்காப்பாளர்களான இரு போலீசாரும் டிரைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

10 நிமிட துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னரே கெளசல்யன் மற்றும் 4 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். புனனை என்றஇடத்தில் இச் சம்பவம் நடந்தது.

சுனாமி நிவாரணப் பணிகள் குறித்து வன்னியில் இவர்கள் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத்தாக்குதல் நடந்துள்ளது.

இத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவுத் தலைவர் தமிழேந்தியும் கொல்லப்பட்டுவிட்டதாக நேற்றிரவில் புரளிகிளம்பியது. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள புலிகள், தமிழேந்தி கிளிநொச்சியில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

2002ம் ஆண்டில் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின் கொல்லப்பட்டுள்ள மூத்த புலித்தலைவர் கெளசல்யனே ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+