எஸ்.ஏ. ராஜாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைதான பிரபல கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ. ராஜாவின் ஜாமீன்மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
ராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
ஆலடி அருணா கொலை வழக்கை கடந்த டிசம்பர் 31ம் தேதி போலீஸார் பதிவு செய்தபோது அதில் எனது பெயர்குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் கைதான வேல்துரை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே எனது பெயர் இந்தவழக்கில் சேர்க்கப்பட்டது. அவரது வாக்குமூலம் தவிர என் மீது குற்றம் சுமத்த எந்த ஆதாரமும் இல்லை.
நானும் ஆலடி அருணாவும் நெருங்கிய நண்பர்கள். கடந்த வருடம் ஜூன் 6ம் தேதி அவரது புதிய கல்லூரி தொடக்க விழாஅழைப்பிதழில் எனது பெயரை சிறப்பு விருந்தினராகக் குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களுக்கு இடையே போட்டி இருந்ததாகபோலீஸார் கூறுவது தவறு.
நான் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன்வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எஸ்.ஏ. ராஜா மதுரையில் தனியார்மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெறவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் செலவுகளை அவரே ஏற்கவும்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications