வீரப்பன்: ஆர்.டி.ஓ.விடம் முத்துலட்சுமி மனு
தர்மபுரி:
வீரப்பன் உடலை தோண்டியெடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தர்மபுரிவருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்.டி.ஓ.) மனு கொடுத்துள்ளார்.
வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில்இரண்டாவது கட்ட விசாரணை தொடங்கியது.
வீரப்பன் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அப்போது உடனிருந்த போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள்உள்ளிட்டோரிடம் ஆர்.டி.ஓ. பிரகாசம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் வந்திருந்து ஆர்.டி.ஓவிடம் மனு ஒன்றை அளித்தார். பின்னர் வெளியில் வந்தமுத்துலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தர்மபுரி பாப்பாரப்பட்டி சாலையில் எனது கணவர் வீரப்பன் மற்றும் 3 பேரை சுட்டுக் கொன்றதாக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார்கூறுகிறார்.
அக்டோபர் 19ம் தேதி காலையிலேயே தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த என்னை தனி அறையில் போலீஸார் வைத்திருந்தனர்.மாலையில்தான் எனது கணவரின் உடலைக் காட்டினர். பிரேதத்தைப் பார்க்கவோ, தொடவோ அவர்கள் அனுமதிக்கவில்லை.
மேலும் மத வழக்கப்படி எனது கணவரின் உடலுக்கு சடங்குகள் செய்யவும் போலீஸார் அனுமதிக்கவில்லை. சடலத்தை எரிப்பதிலேயேஅவர்கள் குறியாக இருந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 20ம் தேதி சடலத்தை அடக்கம் செய்ய அனுமதித்தனர்.
அவரது நெற்றியில் மிக அருகில் இருந்து சுட்டது போல காயம் உள்ளது. ஆனால் உடலில் வேறு எங்கும் காயம் இருந்தது போலத்தெரியவில்லை. மருத்துவ பரிசோதனையில் பல குறைபாடுகள் தெரிகின்றன. முழுமையான பிரதேப் பரிசோதனை செய்யப்படவில்லை.
எனது கணவரின் உடலை வெளி மாநில டாக்டர்களை வைத்து மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். நாங்கள் நியமிக்கும் டாக்டர்உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்.டி.ஓவிடம் வைத்துள்ளேன் என்றார் முத்துலட்சுமி.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
வேலூர், ராணிப்பேட்டைக்கு ஹை அலர்ட்! உஷாரா இருங்க மக்களே! வானிலை மையம் வார்னிங் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ்












Click it and Unblock the Notifications