For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம்- கொழும்பு பயணிகள் கப்பல் திட்டம் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

சென்னைக்கும், கொழும்புக்கும் இடையே நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துத் திட்டத்தை மத்திய அரசுகைவிட்டுவிட்டது.

இத் தகவலை மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தோம். இதற்கான அனைத்துப்பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

அதேபோல, சென்னை-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாதுகாப்பை காரணம் காட்டி இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் வேறு வழியின்றி இத் திட்டம் ரத்துசெய்யப்படுகிறது.

மும்பைக்கும், கராச்சிக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குரவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் பாலு.

தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிப்பதால், கேரளத்தில் இருந்து கொழும்புவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை நடத்திக் கொள்ளலாம் எனஅம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X