ரவி சுப்பிரமணியத்தை மிரட்டிய சங்கர மட பெண் வழக்கறிஞர்கள்!
காஞ்சிபுரம்:
அப்ரூவராகிவிட்ட ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகிவிட்டார். அவரது வாக்குமூலம் ஜெயேந்திரர் தரப்பைபோலீசாரிடம் வசமாக மாட்டிவிட்டுள்ளது.
இதனால் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து ரவி விடுவிக்கப்பட்டுவிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தொடர்ந்து காஞ்சிபுரம்கிளைச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிநலையில் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜனிடம் தனது கைப்பட எழுதிய மனு ஒன்றை ரவி சுப்பிரமணியம்கொடுத்துள்ளார்.
அதில், பிப்ரவரி 1ம் தேதி சங்கர மடத்தின் வழக்கறிஞர்களான தியாகராஜன், சண்கமும் ஆகியோரது சார்பில் பெண் வழக்கறிஞர்களானநசீமா பானு, ரேவதி ஆகியோர் என்னை சிறையில் வந்து சந்தித்தனர்,
அப்போது, ஜெயேந்திரருக்கு எதிராக கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தால் சிறையை விட்டு உயிரோடு வெளியே போக முடியாது என்றுமிரட்டி விட்டுச் சென்றனர். எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ரவி கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம் மற்றும் ரேவதி, நசீமா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆனால் ரவி சுப்பிரமணியத்தின் புகாரை ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து தியாகராஜனும் சண்முகமும்கூறுகையில், நீதிமன்றம் அல்லது அரசு அனுமதி பெறாமல் யாரையும் வழக்கறிஞர்கள் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும், சிறைக்கண்காணிப்பாளர் முன்னிலயிைல்தான் பேச முடியும்.
ரவி சுப்பிரமணியம் சொல்வது போல அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கே சென்று மிரட்டி விட்டு வர முடியாது என்றனர்.
முன்னதாக, குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சங்கர மட வழக்கறிஞர்கள், ரவி சுப்பிரமணியத்தின் வக்கீல்களுடன் பேசி அவரதுஅப்ரூவர் வாக்குமூலத்தை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
இதையடுத்தே குருமூர்த்தி மீது பாய்ந்தது காஞ்சி போலீஸ்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் சார்பாக ஆஜராகி வரும் முக்கியமான வழக்கறிஞர்கள் தியாகராஜனும், சண்முகமும்.
இப்போது அவர்களைக் குறி வைத்தே காஞ்சிபுரம் போலீஸார் காய் நகர்த்துவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications