ஜெயேந்திரர் கைது: கிருஸ்தவ அமைப்புகளின் சதி என்கிறார் சு. சுவாமி
கலவை:
கிருஸ்தவ அமைப்புகளின் சதி காரணமாகவே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கூறியுள்ளார்.
கலவையில் ஜெயேந்திரரை, சந்திரலேகாவுடன் சென்று சந்தித்துப் பேசிய சுவாமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் விஜயேந்திரரை சந்தித்தேன். இப்போது ஜெயேந்திரரை தரிசித்துள்ளேன். ஜெயேந்திரர் மீது பொய் வழக்குபோடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்று நீதிமன்றமும் கூறி வருகிறது. எனவே ஜெயேந்திரர் மீதான வழக்குதோற்றுப் போகும்.
இத்தகைய பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 358வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.மேலும், ஜெயேந்திரர் மற்றும் மடத்தின் பெயரைக் கெடுத்ததற்காக முதல்வர் ஜெயலலிதா மீது ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்குதொடரலாம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிர்பந்தம் காரணமாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய கிருஸ்துவ அமைப்புகள்சேர்ந்து இந்த சதியை செய்துள்ளன.
தர்மத்தை கெடுக்கவும், இந்து மதத்தை கேவலப்படுத்தவும் சர்வதேச அளவில் சதிச் செயல் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது மக்கள்ஆதாரவு இல்லாததால் அந்தச் சதி தோற்று விட்டது. ஜெயேந்திரர் கைது காரணமாக ஜெயலலிதாவின் எதிர்காலம் நிச்சயம் பாதிக்கும்.
பெங்களுருக்கு வந்த அமெரிக்கா நாட்டு மதப் பிரசாரகர் பெனின் 3 நாள் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டது. மூட நம்பிக்கைகளைபரப்புவதாக அமெரிக்காவிலேயே அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்புறம் ஏன் அவரை இந்தியாவுக்குள் விட்டார்கள்?
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து விடுதலை புலிகள் ஆதரவில்லாத தலித் அமைப்புகளுடன் ஜனதாக் கட்சி, வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்.,நடராஜனின் வன்னியர் அமைப்பு ஆகியவை சேர்ந்து போராட்டம், மற்றும் பொதுக் கூட்டம் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம்என்றார் சுவாமி.
ராஜிவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது சங்கர மடத்துக்கு பல தொல்லைகள் தந்ததும் இதே சுப்பிரமணியம் சுவாமி தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்தும் வந்தார். தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி, மாறி நட்பு பாராட்டியசுவாமி இப்போது ஜெயேந்திரருக்கும் சங் பரிவாருக்கும் ஆதரவான நிலையை எடுத்துள்ளார்.
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications