விஜயேந்திரரும் மெளன விரதம்!
சென்னை:
ஜெயேந்திரர் பாணியில் விஜயேந்திரரும் மெளன விரதத்திற்கு மாறியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையாகி கலவை மடத்தில்தங்கியுள்ளார். கலவை வந்தது முதல் அவர் யாருடனும் பேசாமல் மெளன விரதம் இருந்து வருவதாக மடத்தினர்தெரிவித்துள்ளனர்.
அவரை பலரும் சென்று சந்தித்து வருகிறார்கள். ஆனால் அவர் யாருடனும் பேசியதாகத் தெரியவில்லை.
இந் நிலையில் இரண்டாவது குற்றவாளியாக கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விஜயேந்திரரும் ஜெயேந்திரர்வழியில் மெளனத்திற்கு மாறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமான பங்களாவில் விஜயேந்திரர் தங்கியுள்ளார்.அவரையும் பலரும் சந்தித்து வருகிறார்கள். ஆனால், விஜயேந்திரர் யாருடனும் பேசாமல் மெளன விரதம் இருந்துவருகிறார்.
அன்றாட பூஜைகளில் ஈடுபட்டு வரும் விஜேயந்திரர் பங்களாவுக்கு அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குசென்று வழிபடுகிறார். தன்னை சந்திக்க வருவோரிடம் சைகையால் பேசி ஆசிர்வதித்து வருகிறார்.