For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குருமூர்த்தியை பழிவாங்க போலீஸ் முயற்சி: சுதேசி ஜாக்ரன் மன்ச்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Gurumoorthyகுருமூர்த்தி மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ள குருமூர்த்தியை கைது செய்ய காஞ்சி போலீஸ் படை முயன்று வருகிறது. ஆனால், அவர்தலைமறைவாக இருந்து வருகிறார். சங்கரராமன் கொலை வழக்கை திசை திருப்பும் வகையில் த நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரைகள்எழுதியதாக அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் மனோஜ் குமார் சொந்தாலியா, தமிழில் அதை வெளியிட்ட துக்ளக்ஆசிரியர் சோ ஆகியோரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் முரளீதர் ராவ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சங்கரராமன் கொலை வழக்கில் போலீசாரின் விசாரணையில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியும், விசாரணை செல்லும் பாதையைவிமர்சித்தும் கட்டுரைகள் எழுதியதற்காக அவரைப் பழிவாங்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் தமிழக போலீசாருக்கு உள்ள வன்மம் இதன் மூலம் வெளிப்படையாகிவிட்டது.

போலீசாரின் தவறுகளை குருமூர்த்தி மேலும் வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தான் அவரை போலீஸ் நெருக்கடி தந்துதுன்புறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம். தமிழக அரசின் செயல்களை வெட்டவெளிச்சமாக்குவோம் என்று கூறியுள்ளார் ராவ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X