முகம்மது அலியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு
Subscribe to Oneindia Tamil
சென்சென்னை:
கும்மிபோலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள டிஐஜி முகம்மது அலி, உதவிகமிஷனர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சாது ஆகியோரது நிபந்தனைகளை சிபிஐ நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
அலியும் சங்கரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்போது ஜாமீனில் இருக்கும் இவர்கள் திங்கள், புதன்மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை சிபிஐ அலுவலகத்திலும், ராமசாமி சாது மதுரை சிபிஐ அலுவலகத்திலும் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த 3 பேரும் தங்களது நிபந்தனையை தளர்த்தக் கோரி மனு செய்தனர். இந்தமனுவை பரிசீலித்த சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி அருள்ராஜ், 3 பேரும் வாரத்தில் ஒரு நாள், திங்கள்கிழமை மட்டும்கையெழுத்திட்டால் போதும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications