மொழிபெயர்ப்பு: பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
டெல்லி:
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் பாவண்ணனுக்குக் வழங்கப்படுகிறது
கடந்த ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் 22பேரின் பெயர்களை சாகித்ய அகாடமி தலைவர் கோபிசந்த் நரங் அறிவித்தார்.
கன்னடத்தில் பைரப்பா எழுதிய பர்வா என்ற நூலை தமிழில் பருவம் என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்ட எழுத்தாளர்பாவண்ணனுக்கு தமிழுக்கான விருது கிடைத்தது.
இதேபோல, குலசேகர ஆழ்வான் பெருமாள் திருமொழி நூலை, மலையாளத்தில் மொழி பெயர்த்த புதுச்சேரி ராமச்சந்திரனுக்கும்விருது கிடைத்துள்ளது.
மொத்தம் 22 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. ரூ. 20,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம்ஆகியவற்றைக் கொண்டது இந்த விருது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த விருதுகள் வழங்கப்படும் என நரங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications