டெல்லியில் பிரதமருடன் வைகோ சந்திப்பு
சென்னை:
ஏழை நோயாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விதியை தளர்த்துமாறு பிரதமர்மன்மோகன் சிங்கிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சரவை மாற்றப்படவுள்ளதாகக் கூறப்படும் சூழலில் வைகோ நேற்று டெல்லி சென்றார். இது குறித்து மதிமுக தரப்பில்வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
டெல்லியில் பிரதமரை வைகோ சந்தித்தார். அப்போது, சிகிச்சைக்கான செலவுகளை சந்திக்க முடியாமல் அவதிப்படும் ஏழைநோயாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியில் கொண்டு வரப்பட்டுள்ள விதிகளைத் தளர்த்துமாறு அவர் பிரதமரிடம் கோரிக்கைவைத்தார்.
ஒரு எம்.பி. ஒரு மாதத்திற்கு ஒரு நோயாளிக்கு மட்டும் நிதியுதவி செய்ய பரிந்துரைக்கலாம் என்று புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்து செய்யுமாறு வைகோ கோரினார்.
அதேபோல, இதய நோய் உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆகும் முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும், பிற நோய்களுக்குரூ. 50,000 வரை நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டார் என்று செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
இது தவிர அரசியல் நிலவரம் குறித்தும், அமைச்சரவையில் மதிமுக சேருவது குறித்தும் வைகோவும் பிரதமரும் பேசியதாகத் தெரிகிறது.
அமைச்சரவையில் சேர மதிமுகவை காங்கிரஸ் தொடர்ந்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications