தமிழில் அர்ச்சனை: கோவிலில் பாமக போராட்டம்
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யக் கோரி பாமகமகளிரணியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாலு- பிகார் முதல்வர் ராப்ரிதேவியின் மூத்த மகள் பெங்களூரில் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றும் சாப்ட்வேர்என்ஜினியருக்கு மணமுடிக்கப்பட்டுள்ளார்.
தனது இரண்டாவது மகளுக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார் லாலு. இவருக்கும் மக்கள் தமிழ் தேசம் தலைவரும்முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனின் மகனுக்கும் சம்பந்தம் பேசப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கண்ணப்பனும் லாலுவின் யாதவ் (கோனார்) சமூகத்தைச் சேர்ந்தவரே.
நியூமராஜிப்படி சமீபகாலமாக ராஜ கண்ணப்பன் என்ற நாமகரணத்துடன் விளங்கி வரும் கண்ணப்பனிடம், இந்தத்திருமணப் பேச்சு குறித்து இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால், அவர் நேரடியாக பதில் தர மறுத்துவிட்டார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கண்ணப்பன் பேசுகையில்,
லாலு பிரசாத்தின் மகளை, எனது மகனுக்குப் பேசி வருவதாக வரும் செய்திகளுக்கு நான் பதிலளிக்கவிரும்பவில்லை. அது எனது குடும்ப விவகாரம். சரியான நேரத்தில் நானே விளக்கமாக சொல்வேன்.
பீகாரில் முதல்வர் ராப்ரி தேவியை ஆதரித்து ஏற்கனவே நான்கு நாட்கள் தமிழகத்தில் இருந்து தொண்டர்களுடன்சென்று பிரசாரம் செய்துள்ளேன். மீண்டும் வரும் 20ம் தேதி பீகார் செல்கிறேன்.
ராப்ரி தேவி தொகுதியில் அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறேன். ராப்ரி தேவிதான் மீண்டும் முதல்வராவார்.
புதுக்கோட்டையில் எங்களது கட்சியின் முதலாவது மண்டல மாநாடு ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறும். அதைத்தொடர்ந்து வேலூர், மதுரை, விழுப்புரம், நெல்லை சேலம் ஆகிய நகரங்களில் மண்டல மாநாடுகள்நடத்தவுள்ளோம்.
அதன் பின்னர் சென்னையில் பிரமாண்டமான மாநில மாநாடு நடத்தப்படும்.
தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அது சரியான கோரிக்கை அல்ல.
நடைமுறைக்கு இது சுத்தமாக ஒத்துவராது. நம்மை நாமே பிரித்துக் கொள்வது போலத்தான் இது. இதனால்தமிழர்கள்தான் பலவீனமடைவார்கள் என்றார் ராஜ கண்ணப்பன்.