சுனாமி: கடலூர் கிராமத்தை தத்தெடுக்கும் முன்னாள் பாஜக முதல்வர்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கிராமத்தைத் தத்தெடுக்க டெல்லி முன்னாள் பா.ஜ.க. முதல்வர் சாஹிப் சிங் சர்மா முன் வந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தை இந்தி நடிகர் விவேக் ஓபராய் தத்தெடுத்து அதை சீர்படுத்தி வருகிறார். அங்கு முதலில்தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்த அவர் தற்போது நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் கூட சில கோலிவுட் கோண வாய்கள் விமர்சித்து வருவது தனி ஸ்டோரி.
இந் நிலையில் மாமல்லபுரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட புதுக் கல்பாக்கம் கிராமத்தைத் தத்தெடுக்க பாஜகவைச் சேர்ந்த முன்னாள்டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மா முன் வந்துள்ளார்.
இதற்காக சென்னை வந்த அவர் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷை சந்தித்துப் பேசினார்.
புதுக் கல்பாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தர நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுக்கல்பாக்கம் கிராமத்தில் ரூ. 4.4 கோடி மதிப்பில் 230 குடும்பங்களுக்கு ராஷ்ட்ரீயசுவாபிமான் அமைப்பின் சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
இதற்கு நிலம் வழங்குமாறு தமிழக அரசைக் கோரியுள்ளேன். ஏற்கனவே இதுதொடர்பாக கடிதமும் எழுதப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications