பாலகுருசாமிக்கு புதிய பதவி
சென்னை:
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தென் மண்டல கமிட்டி தலைவராக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்இ.பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஜெயராமன் கூறுகையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின்அனைத்து உயர் பதவிகளுக்கும், தொழில்நுட்பக் கழகங்களில் பணியில் இருப்போர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றுசமீபத்தில் தேசிய அளவில் கொள்கை வகுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தென் மண்டலக் கமிட்டி தலைவராக பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது பல்கலைக்கழகத்திற்குக்கிடைத்த பெருமையாகும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பாலகுருசாமி தொடர்வார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் இருக்கும் வரை கமிட்டி தலைவர் பதவியிலும் பாலகுருசாமி நீடிப்பார். இருப்பினும்அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை கமிட்டி தலைவராக அவர் நீடிக்க முடியும்.
தென்னிந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியின் தரம், புதிய அணுகுறைகள், பாடத் திட்டம் உள்ளிட்டவை குறித்து அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலுக்கு தென்மண்டல கமிட்டி ஆலோசனைகள் வழங்கும் என்றார்.
இக் கமிட்டியில் நான்கு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்:
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குனர், சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சிக் கவுன்சிலின்இயக்குனர், பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி முதல்வர், ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகதுணைவேந்தர் ஆகியோர்.












Click it and Unblock the Notifications