2 பைக்குகள் மோதல்: 4 இளைஞர்கள் சாவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 வாலிபர்கள்பலியாயினர்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் தூக்கநாயக்கன் பாளையம் என்ற கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.
படு வேகத்தில் சென்ற அவர்கள் சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே வந்தபோது, எதிரே அதிக வேகத்தில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதினர்.
இதில் ரவி, தண்டபானி, லோகநாதன், மணிகண்டன் ஆகிய நால்வரும் தூக்கி வீசப்பட்டு, தலையில் அடிபட்டு சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பாபு என்ற இளைஞர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில்சேர்க்ப்பட்டுள்ளார்.
இறந்தவர்களி தண்டபாணி, ரவி ஆகிய இருவரும் அரசு டாஸ்மாக் மதுக் கடையில் பணியாற்றி வந்தவர்கள் என்பதுதெரியவந்துள்ளது. இறந்த நால்வருமே மணமாகாத இளைஞர்கள்.