சுனாமி நிவாரணத்துக்கு மாரதான் ஓட்டம்
சென்னை:
சுனாமி நிவாரணத்துக்காக நிதி திரட்ட ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து இன்றுநடத்திய சென்னை மாரதான் ஓட்டத்தில் சுமார் 8,500 பேர் கலந்து கொண்டனர்.
ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் பல்வேறு வயதினருக்காக 11 பிரிவுகளாக இந்த ஓட்டம் நடந்தது.
ஆண்களுக்கான மாரதான் போட்டி அண்ணா சமாதியில் இருந்து இன்று காலை தொடங்கியது. 42 கி.மீ. தொடர்ந்து ஓடும் இந்தப்போட்டியை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ் துவக்கி வைத்தார். இதில் கென்யாவைச் சேர்ந்த மாரதான் வீரர் உள்பட பலர்பங்கேற்றனர்.
இந்த ஓட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் மாதவன், அருண்பாண்டியன், கிரிக்கெட் வீரர் ராபின் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கான மாராதான் போட்டி 21 கி.மீ. தூரம் கொண்டது. இதிலும் பல பெண்கள் பங்கேற்றனர்.
சுமார் 1 கி.மீ. ஓட்டம் கொண்ட பிரிவில் நடிகர்கள் ஜீவா, மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா, நடிகைகள் பூஜா, சங்கீதா, கிரிக்கெட்வீரர் ரமேஷ் ஆகியோரும், பல டிவி நடிகர், நடிகர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications