அனாமிகா: சிறுமியை ஆஜர்படுத்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Anamikaநடிகை அனாமிகா வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனாமிகா தமிழில் கிரிவலம், பதவி படுத்தும் பாடு, அதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், தினசரி செய்திகளில் அடிபடும் அளவுக்கு பரபரப்பாகிவிட்டார் அனாமிகா.

அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த புஷ்பலதா என்ற சிறுமியை சித்திரவதை செய்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந் நிலையில்புஷ்பலதா வீட்டை விட்டு வெளியேறினார். அவரை போலீஸார் மீட்டு புரசைவாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

புஷ்பலதாவின் பெற்றோர் தங்களது மகளை அனுப்புமாறு காப்பக நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்துபுஷ்பலதாவின் தந்தை மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் புஷ்பலதாவை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுகாவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+