கோடையை சமாளிக்க சென்னை ஏரிகளில் போதுமான நீர் இருப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், இந்த ஆண்டு கோடைகாலத்தை சமாளிக்கும் அளவுக்கு போதுமான நீர் இருப்பதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி ஆகிய ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீர் தான் சென்னை நகர மக்களின் குடிநீர்த்தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த முக்கிய ஏரிகளில் மொத்தம் 2,725 மில்லியன் கியூபிக் அடி அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டுவெறும் 186.3 மில்லியன் கியூபிக் அடி நீர்தான் இருந்தது.
எனவே இந்த ஆண்டு கோடைகாலத்தை ஓரளவு சமாளித்து விடலாம் என்று சென்னை பெருநகர குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கைதெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணா நீர் வருகை காரணமாகவே ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்தாக அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications