போலி பெண் சாமியார்: முற்றுகையிட்ட மக்கள்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் போலி பெண் சாமியாரை கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்புஏற்பட்டது.

தாராபுரத்தைச் சேர்ந்தவர் கெளசல்யா. இவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு அப் பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் தங்கநகைகள், பணத்தைப் பெற்றுள்ளார்.

தனது சக்தியால் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், தங்க நகைகளை எடை அதிகமாக்கித் தருவதாகவும் கூறி கெளசல்யாஏமாற்றியுள்ளார்.

அவரது சுயரூபம் தெரியந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இரவு கெளசல்யாவின் வீட்டை முற்றுகையிட்டனர். பணம்,நகையைக் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேற விட மாட்டோம் என அவர்கள் கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், நகைகள் இப்போது தன்னிடம் இல்லை என்றும் அவை வங்கியில் பத்திரமாக உள்ளதாகவும் அந்த பெண் சாமியார் கூறினார்.

இதையடுத்து ஊர்ப் பெரியவர்கள் கெளசல்யாவிடம் பேச்சு நடத்தினர். அப்போது வாங்கி நகை, பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாககெளசல்யா எழுதித் தந்தார். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் சமாதானமடைந்து அங்கிருந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+