இந்தோனேஷியா: குப்பை மலை சரிந்து 150 பேர் பலி
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் கடும் மழை காரணமாக மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பை சரிந்து 70க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில்150க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
சுனாமி தாக்குதலில் இருந்து இந்தோனேஷியா இன்னும் மீளாத நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தொடர்ந்து நில நடுக்கங்களால் இந்தோனேஷியாவின் தீவுகள் அதிர்ந்து வரும் நிலையில் அங்கு கன மழையும் பெய்து வருகிறது.
ஜகார்தாவுக்கு 200 கி.மீ. தென் கிழக்கே உள்ள பாண்டுங் என்ற இடத்தில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பை மேடு சரிந்து விழுந்தது.இதில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் இதில் தரைமட்டமாயின.
இதில் 146 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் குப்பை கழிவுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதுவரை 7 உடல்கள் தான்மீட்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான டன் குப்பை இப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. மழையோடு, நிலச்சரியும் ஏற்பட்டதில் இந்த குப்பை மலை சரிந்தது.