For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுக் காளைகள் முட்டியதில் 2 பேர் பலியாயினர்.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவாப்பூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவையொட்டிஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கவிநாடு கண்மாயில் நடந்த ஜல்லிக்கட்டில் 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

ஆயிரக்கணக்கானவர்கள் ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டனர். அப்போது காளைகளை அடக்க முயன்ற ரவி, மூக்கையா ஆகிய இருவரும்காளைகள் முட்டித் தூக்கிப் போட்டதில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காளைகள் முட்டி படுகாயமடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X