கல்விக் கட்டண கொள்ளை: பாமக எச்சரிக்கை
விழுப்புரம்:
தனியார் சுய நிதி பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்காவிட்டால்பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
கட்சியின் மாணவர் சங்க மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.இதில்,
அனைவருக்கும் இலவச உயர் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சுய நிதி பொறியியல்மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுய நிதிப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூகளில் 75 சதவீதம் அரசு ஒதுக்கீடு, 25 சதவீதம் நிர்வாகத்திற்கான ஒதுக்கீடு என நிர்ணயிக்கவேண்டும்.
கல்வி கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் நர்வாகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம்நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications