மீண்டும் முன் ஜாமீன் கோருகிறார் ஜெயேந்திரர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் மூலம் ரவி சுப்பிரமணியம் மிரட்டப்பட்டதாக போலீசார் பதிவு செய்துள்ள புதிய வழக்கில் ஜெயேந்திரர்கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயேந்திரரின் சார்பில் இன்று இந்த மனு மிக அவசரமாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இப்போது பெண் வழக்கறிஞர்களான ரேவதி, நசீரா பானு மூலமாக முக்கிய சாட்சியான ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக போலீசார்தாக்கல் செய்துள்ள வழக்கு ஜெயேந்திரரைக் குறி வைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications