பெண்களுக்கு இட ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் 33% இடங்களை அதிகரிக்க திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை சமாளிப்பதற்காக பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் 33சதவீத இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாராளுமன்றத்திலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றுநீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை அதிகாரபூர்வ சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவிடவில்லை. கடந்த 1996ல் தொடங்கி பலமுறை இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்போதிலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பெண்களின் ஆதரவை இழக்கவேண்டிவருமோ என்ற பயத்தில் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகஎதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு காரணம் கூறப்பட்டு இதுவரை இந்த மசோதாவுக்குமுட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு இடஒதுக்கீடு மசோதாவை எப்படியும் நிறைவேற்றி விடுவது என்பதில்உறுதியாக உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும்கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில்ஆண்களுக்கான போட்டியிடும் இடங்கள் குறையும். இதையடுத்து இடங்களின் எண்ணிக்கையை 33 அதிகரித்துஇந்தப் பிரச்சனையை சமாளிக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே டெல்லியில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றிபரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+