இரானில் பயங்கர நிலநடுக்கம்: 231 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்:

இரானில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 231 பேர் வரை பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேவருகிறது.

காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது. இதில் பல கிராமங்கள் அடியோடுதரைமட்டமாகியுள்ளன. இதுவரை 231 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பலியானோர் எண்ணிக்கை மிக அதிகமாகஇருக்கலாம் என்று தெரிகிறது.

1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கெர்மன் என்ற இடத்திற்கு 56 கிமீ தொலைவில் நில நடுக்கத்தில் மையம் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சித் துறைதெரிவித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு டிசம்பரில் இரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 26,000 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது. ரிக்டர்அளவுகோலில் 6.6 என்ற அளவுக்கு அந்த நிலநடுக்கம் பதிவானது.

இரானின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் சுடு மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் தான் என்பதால் அவை சிறிய நில அதிர்வுகளையும்தாங்குவதில்லை. இதனால் நில நடுக்கங்களால் இந்த நாட்டில் உயிர்ச் சேதங்களின் அளவு அதிகமாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+