காஞ்சி. வழக்கறிஞர்கள் மீண்டும் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் 4 பேர் மீது காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் சிறைக்கு சென்று ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீரா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதைக் கண்டித்து கடந்த வாரம் 3 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல், 4 வழக்கறிஞர்கள் மீதும் காஞ்சிபுரம் போலீஸார் தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதையடுத்து இன்று முதல் மீண்டும் 3 நாட்களுக்கு நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

நாளை குற்றப் பத்திரிக்கை நகல்?:

சங்கரராமன் கொலை வழக்கில் காவல் நீட்டிப்புக்காக விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேர் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதையடுத்து நாளையே குற்றப் பத்திரிக்கை நகலை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+