For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாதவன் வழக்கில் ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன்: நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு உயர் நீதிமன்றம் இன்று முன் ஜாமீன் வழங்கியது.

சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த ஜெயேந்திரர் மீது மாதவன் தாக்கப்பட்ட வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது.

மாதவன் தொடர்பான விசாரணை முடிக்கிவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் தான் கைதாகலாம் என அஞ்சிய ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இதனை விசாரித்து வந்த நீதிபதி முருகேசன் இன்று தீர்ப்பு வழக்கினார்.

தனது தீர்ப்பில், மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் மார்ச் 10ம் தேதிக்குள் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சரணடைய வேண்டும். இந்த வழக்கில் சாட்சியங்களைக் கலைக்க முயலக் கூடாது. விசாரணைக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது.

மாதவன் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்து வரும் போலீஸார் முன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நேரில் தவறாமல் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X