மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே ரூ. 1 கோடி நகையை கொள்ளையடித்த கும்பல் கைது
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே கடந்த ஜனவரி 14ம் தேதி இரவு ரூ. 1கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 16 கிலோ தங்க நகைகள், 3 கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புரசைவாக்கத்தில் நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் தேவராஜ். இவர் கடந்த பொங்கல் தினத்தன்று கொல்கத்தாவில் இருந்து 17.5 கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத்திலுருந்து நகைக் கடைக்குச் சொந்தமான ஆட்டோவில் ஏறிக் கிளம்பினார்.
விமான நிலையத்தைத் தாண்டி கத்திப்பாரா சந்திப்பை ஆட்டோ நெருங்கிக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் போலீஸார் போல உடையணிந்த இருவர் ஆட்டோவை மறித்து நிறுத்தினர்.
ஆட்டோ நின்றதும் போலீஸார் போல இருந்த இருவரும் உருட்டுக் கட்டைகளால் தேவராஜைத் தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு பின்னால் வந்த வாகனத்தில் ஏறித் தப்பிவிட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பி. சந்தீப் மித்தல், டிஎஸ்பி சுப்பிரமணியம் ஆகியோரின் மேற்பார்வையில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்து.
இந் நிலையில், பூக்கடை பகுதியில் ஒருவர் ஏராளமான நகைகளை விற்க வருவதாக போலீஸாருக்குத தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படையினர் விரைந்து சென்று அந்த நபரை வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் டோலியா என்ற பப்பு என்ற ஜித்தன் எனத் தெரியவந்தது. மீனம்பாக்கம் நகைக் கொள்ளைக் கும்பலில் ஜித்தனும் ஒருவன் என்பது விசாராணையில் தெரியவந்தது. அவனிடமிருந்து அரை கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் சித்து, மகாவீர், வின்சென்ட், சித்தார்த்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பப்புதான் போக்குவரத்த போலீஸ்காரர் போல நடித்தவன். மகாவீர், காக்கி உடை போலீஸாக நடித்தவன்.
அந்த புரசைவாக்கம் நகைக் கடையில் முன்பு சித்து வேலை பார்த்து வந்துள்ளான். கடையின் மேனேஜர் தேவராஜ் கொல்கத்தா சென்று நிறைய நகை வாங்கி வருவதைப் பார்த்த அவன் கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளான்.
இந்தக் கும்பலால் பல்வேறு கடைகளில் விற்கப்பட்ட நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். நகைகளை விற்று வாங்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இக் கொள்ளைக் கும்பலில் இடம் பெற்றிருந்த சினிமா ஸ்டண்ட் நடிகர் சங்கர், அஷ்ரத் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறோம் என்றார்.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications