நேபாளத்தில் டிவி ஸ்டேஷன் தகர்ப்பு
காட்மண்டு:
நேபாளத்தில் அரசு தொலைக்காட்சி நிலையம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.சரமாரியாக குண்டு வீசிய இவர்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்து ஏராளமான பொருட்களைகொள்ளையடித்துச் சென்றனர்.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று பாங்கேமாவட்டம் கோகல்பூரில் உள்ள ஒரு அரசு தொலைக்காட்சி நிலையத்தின் மீது நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சரமாரியாக குண்டு வீசிய இவர்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு தீயும் வைத்தனர். மேலும் இங்கிருந்து 7கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த தாக்குதலால் 4 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்புமுற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தங்காதி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 10தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications