ஜெ. வழக்கு: ஆவணங்கள் சரி பார்க்கும் பணி தீவிரம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சரி பார்க்கும் பணி பெங்களூரில் தீவிரமாக நடந்துவருகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விரைவில் தொடங்கவுள்ளது. சமீபத்தில்தான் ஆவணங்களைமொழி பெயர்க்கும் பணி முடிவடைந்தது. இதையடுத்து அரசு வழக்கறிஞர் அறிவிக்கப்பட்டார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக பச்சாப்புரேயும், அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தற்போதுவழக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நீதிமன்ற அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் மேசை, நாற்காலிகள், அலமாரிகள், பீரோக்கள் வாங்கப்பட்டுள்ளன.கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரங்கள், தட்டச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.
தற்போது ஆவணங்களை சரிபார்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆவணங்களை சரி பார்த்து முறைப்படுத்தி, வரிசைப்படுத்தும்பணி முடிவடைந்த பின்னர் வழக்கு எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
-
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!










Click it and Unblock the Notifications