ஜெ. வழக்கு: ஆவணங்கள் சரி பார்க்கும் பணி தீவிரம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சரி பார்க்கும் பணி பெங்களூரில் தீவிரமாக நடந்துவருகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விரைவில் தொடங்கவுள்ளது. சமீபத்தில்தான் ஆவணங்களைமொழி பெயர்க்கும் பணி முடிவடைந்தது. இதையடுத்து அரசு வழக்கறிஞர் அறிவிக்கப்பட்டார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக பச்சாப்புரேயும், அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தற்போதுவழக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நீதிமன்ற அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் மேசை, நாற்காலிகள், அலமாரிகள், பீரோக்கள் வாங்கப்பட்டுள்ளன.கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரங்கள், தட்டச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.
தற்போது ஆவணங்களை சரிபார்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆவணங்களை சரி பார்த்து முறைப்படுத்தி, வரிசைப்படுத்தும்பணி முடிவடைந்த பின்னர் வழக்கு எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications