கூட்டணி ஆட்சி நேரம் வந்து விட்டது: கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நேரம் கனிந்து விட்டது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர். கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய கருத்துக்களில் எந்தத் தவறும் இல்லை. கூட்டணி ஆட்சிக்கு தமிழகம் தயாராக வேண்டும்.அதற்கான சரியான நேரம் வந்து விட்டது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க திமுக தலைவர் கருணாநிதி அவராகவே முன்வர வேண்டும்.

தேர்தல் முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில்வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படக் கூடாது. கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் சதவீத அடிப்படையில் எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும்.

இந்த யோசனை தொடர்பாக தீவிர விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்குமுன்வர வேண்டும். இந்த முறைக்கு முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் ஆதரவு தெவித்துள்ளார்.

கோவையில் ஏப்ரல் 14ம் தேதி மாநில அளவிலான மாநாட்டை நடத்தவுள்ளோம். இதில் முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர் என்றார் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+