For Daily Alerts
Just In
முதுமலை சரணாலயம் 2 மாதங்களுக்கு மூடல்!
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.
முதுமலையில் தேசிய விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு யானைகளுக்கான தனி சரணாலயமும் உள்ளது.
கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் சரணாலயத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாககாட்டுக்குள் ஆங்காங்கே தீவிபத்தும் ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு நாளை முதல் 2 மாதங்களுக்கு சரணாலயத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளுக்குத்தேவையான தண்ணீர் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நிரப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதுமலையைப் போலவே, கோவை மாவட்டம் பரம்பிக்குளம் சரணாலயமும் நாளை முதல் 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.
Comments
Story first published: Monday, February 28, 2005, 5:30 [IST]