For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி நிவாரணம்: அரசியல்வாதிகளுக்கு டிஜிபி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு பெரும் இடையூறு விளைவிக்கும்விதமாக அரசியல்வாதிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நடந்து கொண்டதாக தமிழக டிஜிபி அலெக்சாண்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடந்த பேரிடர் நிவாரணம்: சுனாமி என்ற கருத்தரங்கில் பேசிய அலெக்சாண்டர்,

அரசுடன் தங்களுக்கு உள்ள தொடர்பை அடிப்படையாக வைத்து சுனாமி பிரச்சினையில் அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களைத்தெரிவிக்கின்றனர்.

அரசுடன் நல்லுறவு வைத்திருந்தால் அரசைப் பாராட்டியும், இல்லாவிட்டால் நல்ல பணிகளைக் கூட கடுமையாக விமர்சித்தும் அரசியல்தலைவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இதனால் நிவாரணப் பணியில் ஈடுபடுவோன் மனம் புண்படுகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. அரசைக் குற்றம் சாட்ட வேண்டும்என்பது மட்டும்தான் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.

இவர்களாவது பரவாயில்லை, தொண்டு நிறுவனங்கள் இன்னும் மோசம். சுனாமி போன்ற பேரிடர் சம்பவங்களில்தான் அவர்கள் தங்களதுபலத்தையும், செல்வாக்கையும் உலகுக்குக் காட்ட சரியான நேரம். எனவே போட்டி போட்டுக் கொண்டு அரைகுறையாக எதையாவதுசெய்து விளம்பரம் தேட முனைகிறார்கள்.

அவர்களது நோக்கத்தில், உதவியில் முழுமையான சேவை மனப்பான்மை இல்லை என்பதே உண்மை.

அவர்களுக்குள், யார் பெரியவர் என்ற போட்டியும், நிவாரணப் பணிகளை முழுமையாக செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.

இப்படிப் பல சவால்களுக்கிடையே அரசு நிர்வாகமும், காவல்துறையும் தங்களால் இயன்ற பணிகள் அனைத்தையும் சிறப்புடன்செய்துள்ளதையும் நாம் இங்கே சொல்லியாக வேண்டும்.

அதிலும், நாகப்பட்டனம் ஆட்சித் தலைவர் ஜே.ராதாகிருஷ்ணன், கடலூர் ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் மிகச் சிறப்பானமுறையில் செயல்பட்டனர் என்றார் அலெக்சாண்டர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X