பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடக்கம்
சென்னை:
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. 5.7 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வுஎழுதுகின்றனர்.
தமிழ் முதல் தாளுடன் நாளை தொடங்கி, 23ம் தேதி பொருளாதாரத் தேர்வுடன் பிளஸ் டூ தேர்வுகள் முடிகின்றன.
இதற்காக 1,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பபட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளைத் தவிர்க்க 65 கல்விமாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்வு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏப்ரல் 4-ந்தேதிதொடங்கி 26-ந்தேதி முடிவடைகிறது.
மாணவர்களை குழப்பும் கல்வித்துறை:
இதற்கிடையே ராமநாதபுரத்தில் தேர்வுத்துறையின் குளறுபடியால் பிளஸ் டூ தனித் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெரும் குழப்பத்தில்தள்ளப்பட்டுள்ளனர்.
தனித் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டுகள் வழங்கியதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.
ஆங்கில வழியில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டில் தமிழ் வழி என்று வந்துள்ளது. பலருக்கு பாடங்கள் மாறியும்வந்துள்ளது.
வேதியியல் பாடம் எழுத விண்ணப்பித்தவருக்கு இயற்பியல் எனவும், மேலும் சிலருக்கு பாடங்கள் விடுபட்டும் நுழைவுச் சீட்டுகள்வந்துள்ளன.
நாளை தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் தேர்வு மையங்களின் தலைமை ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் உரிய பதில்தராததால் மாணவர்கள் விளக்கம் பெற அங்குமிங்கும் ஓடாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் இந்த மாணவர்களால் கடந்த ஒரு வாரமாக படிக்கக் கூட முடியவில்லை.
இந் நிலையில், நுழைவுச் சீட்டில் குளறுபடி நேர்ந்துள்ள மாணவர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு மைய அதிகாரியிடம் ஒரு கோரிக்கைகடிதத்தைக் கொடுத்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என சில அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications