பணக்காரர்களுக்காக போடப்பட்ட பட்ஜெட்: ஜெ
சென்னை:
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களைப் பாதிக்கும் வகையிலான, இலக்கே இல்லாத பட்ஜெட்டை ப.சிதம்பரம்தாக்கல் செய்துள்ளார் என்று முதல்வர் ஜெயலலிதா கருத்து தெவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்காகப்போடப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களைப் பாதிக்கும் வகையிலான பல அறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.
நாட்டை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது என்பது பட்ஜெட்டில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.பெரும் குழப்பமான பட்ஜெட் இது.
நிதிப் பொறுப்பு மற்றும் நிதி நிலை நிர்வாக சட்டத்தை தன்னால் சரிவர பின்பற்ற முடியவில்லை என்பதைப.சிதம்பரம் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அப்படி ஒத்துக் கொண்டால் மட்டும் போதாது. களையில்லாதபட்ஜெட்டை அவர் தாக்கல் செய்திருக்கக் கூடாது.
பழைய திட்டங்களுக்கு புதுப் பெயர் கொடுத்து மீண்டும் புது உருவம் கொடுத்துள்ளார்கள். தேசிய வேலைவாய்ப்புஉறுதிமொழித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஆறுகளை இணைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் தருகிறது.அதேபோல பாரத் நிர்மாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் 1 கோடி ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குஉறுதிப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழகத்திற்குஎந்தவிதத்திலும் உதவாது.
பின் தங்கிய பகுதிகளுக்கு ரூ. 5,000 கோடி நிதியுதவி அளிக்கும் திட்டத்தால் மாநில அரசின் உரிமையில் மத்தியஅரசு தலையிடுகிறது. ஏற்கனவே விற்பனை வரியை தங்களது கட்டுப்பாட்டில் மத்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. தற்போது மாநில அரசின் நிதியாதாரத்தில் கை வைப்பது போல மத்திய அரசு நடந்து கொள்ளுகிறது.
வங்கியில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள் அதை எடுத்தால் வரி என்று ப.சிதம்பரம் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. கருப்புப் பணத்தைத் தடுக்கப் போகிறேன் பேர்வழி என்று கூறி நாட்டின் பொருளாதாரத்தின்குரல் வளையையே நசுக்கும் வேலையில் இறங்கியுள்ளார் ப.சிதம்பரம்.
இந்த புதிய வரி விதிப்பு காரணமாக வங்கிகளுக்கு வருவதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்படப் போகிறதுஎன்று கூறியுள்ளார் ஜெயலலிதா.