அதிமுக எம்எல்ஏ கொலை: மேலும் ஒருவன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த கொள்ளையன் தரம்சிங்கை போலீஸார் கைதுசெய்தனர். அவனை தற்போது தங்கள் காவலில் எடுத்துப் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரம்சிங் கொடுத்த தகவலின் பேரில் பரத்பூரைச் சேர்ந்த அசோக் லட்சுமண் என்ற மற்றொரு கொள்ளையனும் பிடிபட்டுள்ளான்.
அவனை தமிழகத்தில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து கொண்டு வந்துள்ளனர்.
அவனை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவன் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டான்.












Click it and Unblock the Notifications