சேது சமுத்திரம், குடிநீர் திட்டத்தை தாமதப்படுத்தும் ஜெ: ப.சிதம்பரம் புகார்
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவை தாமதமாக மத்திய அரசு காரணமில்லை, ஜெயலலிதாதலைமையிலான தமிழக அரசே அதற்குப் பொறுப்பு என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம்,
சென்னை நகர குடிநீர்ப் பிரச்சினைக்ைகு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க உதவும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்தஆண்டு அறிவித்தது.
இந்தத் திட்டத்திற்குக் தேவையான ஆதரவை தர வேண்டியதுதான் மத்திய அரசின் கடமை. ஆனால் செயல்படுத்த வேண்டியது மாநிலஅரசுதான். ஆனால், மாநில அரசு இத் திட்டம் குறித்து எதாவது சிந்தித்ததா என்று கூடத் தெரியவில்லை. திட்டம் தாமதமாக அதிமுகஅரசுதான் காரணம்.
அதேபோல, சேது சமுத்திரத் திட்டம் தாமதமாகவும் தமிழக அரசுதான் காரணம். இந்தத் திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும். ஆனால் மேற்கொள்ளவேண்டியது மாநில அரசு. ஆனால் இதிலும் தமிழக அரசு ஆர்வமோ, அக்கறையோ காட்டவில்லை.
குறைந்தபட்சம் அடிக்கல் நாட்டு விழாவையாவது நிடத்தியிருக்கலாம். அதைக் கூட மாநில அரசு செய்யாமல் உள்ளது என்றார் ப.சிதம்பரம்.