4,000 மெ.வாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்
சென்னை:
தமிழகத்தில் மின் உற்பத்தியை மேலும் 4,000 மெகாவாட் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் தாக்கலான பட்ஜெட்டில் நிதியமைச்சர் பொன்னையன் அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தின் மின் உற்பத்தி இப்போது 9,657 மெகா வாட்டாக உள்ளது. உற்பத்தியில் மேலும் 4,000 மெகா வாட்டை அதிகரிக்கநடவடிக்கை எடுக்க உள்ளோம்.
கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட ஆரம்பித்தால் 2,000 மெ.வா மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். ஜெயங்குண்டம்அனல் மின் நிலையத் திட்டப் பணிகளை தமிழக மின் வாரியமும் நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளஉள்ளன.
இதற்காக ரூ. 5,000 கோடி செலவிடப்படும். இதன்மூலம் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தியாகும்.
மாவட்ட தலைநகரங்களில் பாதாள சாக்கடைகள் அமைக்க ரூ. 800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு ரூ. 453.91 கோடி நிதி ஒதுக்கீடு.
மதுரை, கோவையில் 2 மகளிர் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், கரூர்மாவட்டங்களில் ரூ. 85 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமலாக்கப்படும்.
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ரூ. 500.42 கோடி ஒதுக்கீடு, உயர் கல்விக்காக ரூ. 741.77 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.