For Quick Alerts
For Daily Alerts
Just In
"லாக் அப்" சாவுகளில் தமிழகம் 5வது இடம்!
டெல்லி:
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறப்பதில் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசம் தான் முதலிடத்தைவகிக்கிறது. தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,
2004-05ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,334 பேர் காவல் நிலையங்கள் மற்றும் போலீஸ் காவலில்இருந்தபோது இறந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 194 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் 150 பேரும், பிகாரில் 144பேரும், ஆந்திராவில் 117 பேரும் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் 86 பேர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துள்ளனர் என்றார். இதில் என்கெளண்டர் சாவுகளும்அடங்கும்.
Comments
Story first published: Thursday, March 3, 2005, 5:30 [IST]